இசைப்புயல் , mozzard of madras , Oscar வாங்கிய தமிழன் AR RAHMAN


 இசையின் புதிய பரிணாம்ம் தொடங்கி 24 வருடம். அடுத்த வருடம் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆம் அவர் தான் இசைப்புயல் , mozzard of madras , Oscar வாங்கிய தமிழன் AR RAHMAN. 1992 ம் ஆண்டு இவரின் உத்தியோகபூர்வ இசைப்பயணம் மணிரத்னம் அவர்களால் ரோஜா படத்தில் ஆரம்பமானது. இந்த கால கட்டம் ARR க்கு மிகவும் ஒரு நெருக்கடியான காலகட்டம் ஆகும். ஏனெனில் இந்த் காலகட்டத்திலேயே இளையராஜாவின் hit album ஆன தளபதி வந்திருந்தது. அதன் பின் இளையராஜாவுக்கும் மணிரத்தினத்துக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் மணிரத்தினத்திற்கு புதிய மற்றும் திறமையான இசைஅமைப்பாளர் தேவைப்பட்டது. அப்போது தான் ARR ஐப் பற்றி கேள்விப்பட்டார். அந்த நேரம் ARR அவர்கள் விளம்பரங்களிற்கு இசை அமைத்துக்கொண்டிருந்த நேரம். இப்படியான சந்தர்ப்பத்தில் தான் அவர் ரோஜா படத்திற்கு இசை அமைக்க வந்தார். இப் பேச்சு வைரலாக பரவ பலரும் மணி சாரையும் ,ARR ஐயம் கேலி பண்ணிணார்கள். இளையராஜாவுக்கு நிகராக ஒரு சின்ன பெடியனா?? என்றும் ARR யார் எனவும் அலச தொடங்கினார்கள் மக்கள். அப்போது தான் தெரிந்தது மறைந்த இசை அமைப்பாளர் சேகரின் மகனும் இளையராஜாவின் band ல் keyboard கலைஞனாக இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி தனது 6வது வயதில் keyboard வாசிக்க தொடங்கியவன் என்றும் electronically instruments ஐப் பற்றி அறிவு நிறைந்தவர் என்றும் கதைக்காமல் தொடங்கினார்கள். என்ன தான் இருந்தாலும் இசைக்கு இசை ஞானி தான் என்று வேர்ஊன்றிய காலத்தில் இவர் எப்படி இசை தரப்போகிறார் ? என்றும் எப்படி trend set பண்ணபோகிறார் ? அல்லது பழையபடி இருப்பதை வைத்து சில மெட்டுக்கள் மாற்றி தரப்போகிறாரா? என்றும் படம் அவர் முன்னர் கதைக்க தொடங்கி விட்டார்கள். சரி படத்திற்கு இசை அமைக்க தொடங்கி முதல் நாள் recording !!!!எல்லா கலைஞருக்கும் சொல்லிவிடப்பட்டிருந்தது. But அன்று விசேடமாக recording என்று ஒருவருமாவார் வரவில்லை. சிறிது மனக்கலக்கத்துடன் தன் தாயாரிடம் அதைப் பற்றி சொல்ல தாயார் தேற்றி இருக்கும் வளங்களை வைத்து தொடங்கு என்று தாயார் சொல்ல தன்னம்பிக்கையுடன் தொடங்கினார். புது பாடகர்கள, புது மெட்டு , electrical instruments , புது இசை கோர்வையுடன் "சின்ன சின்ன ஆசை "பாட்டு மின்மினியின் குரலில் பதுவுசெய்யப்பட்டது. இடையில் interlude ல் வரும் "ஏலேலோ ஏலே ஏலேலோ"அவரின் கிரில் வந்தது. மற்றும் காதல் ரோஜாவே, புது வெள் ளை மழை பாடல்கள் எல்லாம் தனி இடங்களை பிடித்தது. இதுவரை தபேலா,வயலின் , flute போன்ற இசையை மட்டும் கேட்ட நமக்கு புதிய தரத்தில் bass உடன் கூடிய மற்றும் சிறிய இசையையும் நம் காதுகளுக்கு இனிமையாகவும் தெளிவாகவும் கேட்க முடிந்தது. வழமைகளை உடைத்தார். புது புரட்சி செய்தார். இதன் விளைவு முதல் படத்திலே தேசிய விருது. இவ்வளவத்திற்கும் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 25000ரூபாய் மற்றும் அவர் பெயர் கூட coverல போட வில்லை. தன்ம்பிக்கை , முயற்சி, பக்தி , அமைதி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். எத்தனை விருதுகள் , புகழ் அடைந்தாலும் அவற்றை பெரிதாக எடுக்க மாட்டார். Real hero. Inspiration of most youths. தொடரட்டும் உம் இணைப்பணி.


EmoticonEmoticon