ஈழ தமிழனின் கடல்பயணம்

தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. தமிழர்க்கு என்று ஒரு நாடே இல்லை. இந்த வாசகத்தை நான் பல முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அதாங்க சில அரசியல் கூட்டங்களிலும் கேட்டிருக்கிறேன். இந்த தமிழருக்கு தனி நாடு வேண்டும் என்ற அதங்கத்தில் பிறந்தது தமிழீழ விடுதலைப்புலிகள். நடந்தது 3 தசாப்த யுத்தம்!!! இதெல்லாம் நான் ஏன் சொல்றன்?? உங்களுக்கு தெரிந்தது தானே?? என்று பார்க்கிறீங்களா??? இப்படி அந்த யுத்த காலத்தில் ஆண்கள் எல்லோரும் சண்டைக்கு செல்ல மிஞ்சி இருந்தவர்கள் உயிருடன் இருக்க அவர்களை கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக இருக்க வழி செய்தனர். அப்படி 1986 ம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவின் வன்கூவர் பகுதிக்கு வந்த மக்களின் கதை தான் சொல்ல போகிறேன்.ஒவ்வொரு நாட்டுக்கும் 12 மைல் தான் கடல் எல்லை. அதற்கு மேற்பட்டது சர்வதேச கடல் எல்லை. இது தான் ஒவ்வொரு நாட்டினதும் சட்டம். அப்படி தான் கனடாவின் கடல் பாதுகாப்பு சட்டமும். கனடாவிற்கு முதல் முறை ஒரு யூதக் கப்பல் வந்தது. அதை சர்வதேச கடல் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர் இந்தியாவிலிருந்து சீக்கிய மக்கள் குழு கனடாவிற்கு வந்தது. அம் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்திருந்தது. இப்படி கனடாவின் கடல் பாதுகாப்பு சட்டங்களை அறியாமல் 1986 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து 155 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். நாங்கெல்லாம் பேச்சுக்கு சொல்லலாம் கடலில் கப்பல் மூலம் கனடாவிற்கு போயினம் எண்டு சொல்லலாம். அப்படி கப்பலில் கனடாவிற்கு செல்ல தனி மனதைரியமும் மனதில் உறுதியும் வேண்டும். சுமார் 3-4 மாதங்கள் நீங்கள் கடலில் பயணம் செய்ய வேண்டும், அதுமட்டுமல்ல அவ்வளவு பேருக்குமான சாப்பாடு ,குடிக்க தண்ணீர்,இயற்கை உபாதைகள்,நோய் மற்றும் மருத்துவம் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஅதுமட்டுமல்ல அவர்கள் பயணிக்கும் கப்பல் இல்லை இல்லை அது ஒரு வித படகு என்றே சொல்ல வேண்டும் அதற்கு எரிபொருள் மற்றும் ஒருவித பிரச்சனை இன்றி கனடா வர வேண்டும். ஐயோ !! நினைத்து பார்கவே பயங்கரமாக இருக்கிறதல்லவா!! இப்படி இலங்கையிலிருந்து புறப்பட்ட 2 வது கப்பல் தான் SUNSEA கப்பல். நான் மேற்கூறிய இரண்டும் பெயரளவில் தான் கப்பல். உண்மையில் அது கனடா போன்ற நாடுகளில் மீன் பிடிக்க கூட அது போன்ற கப்பலை பயன்படுத்த மாட்டார்கள். என்று அவர்களை காப்பாற்றிய உள்ளூர் captain கூறிய வார்தைகள் ஞாபகம் வருகிறது. ஆம் இந்த SUNSEA மூலம் வந்தவர்கள் 492 பேர்கள் அதில் ஒருவர் கப்பலிலே இறக்க அப்படியே கடலில் வீசி விட்டு பயணத்தை தொடந்தவர்கள். வேறு வழியில்லை மருத்துவ வசதி கூட இல்லாமல் இருந்த நேரத்தில் அவர்களால் என்ன தான் செய்ய முடியும் ? இக் கட்டுரை எழுதும் போது என் மனதில் எழுந்த கேள்வி இது. இவர்கள் என்ன தைரியத்தில் இப்படி கப்பலில் கனடாவிற்கு இப்படி மக்கள் தொகையாக வெளிக்கிட்டார்கள???ஆம் ஆராய்ந்து பார்த்த போது தான் எனக்கு கிடைத்தது. இவர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்ட காலப்பகுதி இலங கையில் சண்டை உக்கிரமான நடந்த காலமாகும். ஊரிலிருந்து சாவதை விட தப்பிக்க ஒரு வழி. முயற்சித்து தான் பார்ப்போமே!!!எப்படியும் சாகத்தானே போகிறோம் என்ற மனநிலையில் தான் இருந்திருப்பார்கள் இவர்களின் பயணம் படங்களில் வரும் adventure type மாதிரி. இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை தான் மற்றய சவால். இப்படியான பயணங்கள் இயல்பாகவே சுற்றி ஆட்கள் இருந்தாலும் தனிமையை தந்துவிடும் ஏன்னா நேரிடையான மக்கள் தொடர்பு இல்லை மற்றும் எப்போது தரை அல்லது தீவு ,சக மனிதர்களை பார்போம் என்ற உணர்வு எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். அடுத்த கேள்வி இவர்களின் வாழ்க்கை முறை பற்றியது. கனடா சென்ற இவர்களின் பிணக்குகளைத் தீர்த்து வைப்பது யார்??? அதற்கு முதல் இவர்கள் கனடா வந்த வித்த்தை பார்ப்போம். Atlantic சமுத்திரத்தில் பல நாள் பயணித்து கனடாவின் கிழக்கு பகுதியான Territory British Columbia க்குள் வருகின்றனர் முதல் கப்பல் அகதிகள் குழுவான 1986 ம் ஆண்டு குழு. இந்த நேரம் கனடாவின் சர்வதேச கடல் எல்லைக்கு அண்மையாக மீன் பிடித்துக் கொண்டிருந்த Dus Galton மற்றும் அவர்களின் குழுவினர் இவர்களை காண்கின்றனர. அப்போது கப்பலில் இருந்தவர்கள் இது கனடாவா??? இது மொன்ரியலா??? என அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க அவர்களும் ஆமாம் என்று சொல்லி அவர்கள் அவ்வளவு பேரையும் தமது 22 life boats மற்றும் தமது மீன் பிடிக்கும் பெரிய கப்பலில் ஏற்றினர். கப்பலின் எடை அதிகரித்து. ஏன் என்றால் பிடித்த மீன்களும் இருந்தமையால் கப்டன் சொல்கிறார் பிடித்த மீன்களை கடலில் வீசி விட்டு அஅவர்களை ஏற்றிக்கொண்டு விரைவாக கரைக்கு திரும்பினார்கள். கப்டன் உடனடியாக கரையோர எல்லை காவல் படைக்கு தகவல் அனுப்பினார். இவர்களின் அதிஷ்டம் அவர்கள் 155 பேரையும் கனடா அகதிகளாக ஏற்றுப் கொண்டது. ஆனால் இரண்டாவது அகதி கப்பலை அவர்கள் இப்படி எளிதாக உள்ளே விட வில்லை அந்த கப்பலில் வந்த 492 பேரையும் பயங்கரவாதி என குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. பின்னர் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பகுதி அளவாக விடுவிக்கப்பட்டனர். 2010 ல் வந்த இக் குழுவில் சிலர் இன்னும் சிறையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து கனடா வந்தடைந்த பிறகும் இவர்கள் சந்தித்த அவலங்கள் ஏராளம். இவர்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் நல்ல முடிவாக இவர்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர்.இவர்களுக்கு கனடாவில் ஏற்பட்ட அநீதிகளுக்கு தற்போதய பிரதமர் Justin Trudeau பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் அவர்கள் 30 ஆண்டு நிறைவு விழாவை தம்மை காப்பாற்றிய கப்டன் மற்றும் அவர்கள் சகாக்களுடன் நன்றி தெரிவித்தார்கள். தற்போது இவர்கள் அனைவரும் கனடாவின் தற்போதய சிறந்த பிரஜைகளாக உள்ளனர். தமிழனின் தன்னம்பிக்கைதான் எப்போதும் வெற்றிக்கு காரணம்


EmoticonEmoticon