காதலின் பிரிவு

காதலின் பிரிவு

காதலிக்காமல் யாருமே இருந்து விட முடியாது. ஆனாலபேட்டை விசுவாமித்திர்ருக்கே காதல வர வைச்சவங்க நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?? So காதலிச்சவங்க எல்லாருக்கும் பிரிவு என்ற ஒரு நிலை வந்திருக்கும். சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்ததரமானதாகவும் இருந்திருக்கும். நம் பழைய இலக்கியங்களில் இந்த பிரிவை மிக அழகாக கூறுவார்கள். அதுவும் பண்டய காலத்தில் ஐந்து வகையான நிலங்கள் உண்டு. இந்த ஐந்து வகையான நிலத்திற்கும் ஐந்து வகையான ஒழுக்கம் உண்டு. குறிப்பாக பாலை நிலத்திற்கு உண்டான ஒழுக்கம் தான் பிரிதல். "சந்தன தென்றலில" பாட்டில் காதலியை பிரிந்த காதலன் தன்னை காதல் செய்யும் படி பாடுவதாக இருக்கும். இந்த முழுப்பாட்டையும் பாலைவன பின்னனியில் பாட்டை படமாக்கி இருப்பார்கள். அது போல தான் ஜோதா அக்பர் படத்தில் வரும் "மனமோஹனா" பாட்டும்
 ஒரு வித பிரிவைக் காட்டும் பாடல் தான். ஆனால் பிரிவு தலைவனைக்குறித்தல்ல. கட்டாய திருமணத்திற்கு உடன்பட்டு தலைவி திருமணம் புரிகிறாள். இருந்தும் அந்த வேதனையிலிருந்தும் , தன் குடும்ப பிரிவிலும் துன்புற்று இருக்கிறாள். இந்த பிரிவிலிருந்து தன்னை மீட்க கிருஷ்ண பரமாத்மாவாகிய கண்ணனை துதிப்பது போலும் கிருஷ்ணனையே தன் காதலனாக பாவித்து இந்த பாட்டு இருக்கிறது. தலைவி தன் பிரிவை முன்னிட்டு தனக்கு இதிலிருந்து ஒரு வழி கிடைக்காதா?? என எண்ணி பாடுகிறார்.

கார்முகில் வண்ணா வாராயோ
கோதையின் குரலைக் கேளாயோ

என் சோகங்கள் தீர்ப்பாயா-என்
தாகங்கள் தீர்ப்பாயா


என வேண்டி தன் கஷ்டத்தை தலைவி முறையிடுகிறாள்.


குறிப்பாக இந்த பாட்டின் இசையை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதிற்கு ஒரு வித நெருடலைத் தரும் பாடலாக எனக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லலாது இந்த பாட்டின் real feel ஆன பிரிவை தற்காலிகமாக உணர வைக்கும் இசையை ரஹ்மான் தந்திருப்பார். இந்த பாட்டிற்கு பலம் இசை மட்டுமல்ல இந்த பாட்டின் வரிகளும் தான். நா.முத்துக்குமார் தன்னுடைய பணியை செவ்வனவே செய்துள்ளார் அது போல சாதனாசர்க்கமின் குரல் அடுத்த ஒரு பக்க பலமான ஒன்று. எனக்கு தெரிந்து சுவர்ணலதாவின் இடைவெளியை இவர் ஓர் அளவிற்கு நிரப்பியுள்ளார் என்றே எனக்கு மீண்டும் புரிகிறது.  பாடல் தொடங்கி
1.09 -2.15 இடைப்பட்ட நேரத்திலே பாட்டின் orchestra தொடங்குகிறது. ஒரு 15 வயலின் மற்றும் 3 செலோ சேர்த்து வாசித்திருப்பார்கள் போல!!  இந்த பாட்டிற்கு அந்த string section ம் புல்லாங்குழல் இசையுமே போதும் என எப்படி தான் ARR யோசிக்கிறாரோ? தெரியல. ஒரு strong orchestration ஐ கொண்ட பாட்டாக தான் இதை நான் கருதுகிறேன்.

வாழ்க்கை எனும் கடலில் தினமும்
அலையின் மேலே அலை அடிக்க
இதயம் எனும் படகு அதில்
தடுமாறி மோதிடுதே
தூயவனே துடுப்புகள் போட்டு
கரையினில் ஏற்றி விடுவாயா
நடுக்கடலில் விடுவாயா

என் சோகங்கள் தீராய் நீ

Kategori

Kategori